Thursday, May 30, 2013

ஸ்ரீ வண்ணார பரதேசி சித்தர் பகுதி-1


ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்





ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்
220 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.
துயரங்கள் நிறைந்த வீடுகளை தேடிச் சென்று துணி
துவைத்து கொடுத்து – அவர்கள் வழங்கும் உணவை
உண்டு ஆசிர்வாதம் வழங்கி வந்துள்ளார்.

வில்லியனூரில் ஒரு விவசாயி வீட்டில், வீட்டோடு
தங்கியிருந்து வீட்டு வேலைகளை கவனித்து வந்தார்.
ஒரு சமயம் விவசாயியின் நிலத்தின் களத்துமேட்டில்
நெல்லை குவித்து வைத்திருந்தனர்..அதைக் கண்ட         
சில கயவர்கள், களவாட எண்ணி களத்துமேட்டில்
ஒளிந்து கொண்டு இருள் சூழ காத்திருந்தனராம்.
அதை தன் ஞான திருஷ்டியால் கண்டுணர்ந்த
சுவாமிகள் விவசாயின் வீட்டில் தெரிவித்தார்.
ஆனால் யாரும் அதை நம்பவில்லை.
சுவாமிகள் அத்திருடர்களை தன் ஞான சக்தியால்
அங்கேயே கட்டிப் போட்டார்.
மறுநாள் காலையில் வேலையாட்கள் சென்று
பார்த்த பொழுது திருடர்கள் அங்கேயே கட்டுண்டு
கிடப்பதை பார்த்து சுவாமிகளின் சக்தியை புரிந்து
கொண்டனர்.
பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க மழையை
ஏற்படுத்தி நிறுத்தும் சக்தி உள்ளவராம்.
குழந்தை இல்லாதவர்களும், திருமணம்
ஆகாதவர்களும் இவர் சமாதியில் வந்து வேண்டிக்
கொண்டால் குழந்தை பிறக்குமாம்-திருமணம்
நடக்குமாம். இங்குஅன்னதானம் வழங்கினால்
நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.


மேலும்  அவரைப் பற்றி.......

No comments:

Post a Comment