ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்
புதுவையிலுள்ள
மூலகுளம் பகுதியிலிருந்து
சுவாமிகள்
வந்ததாக கூறுவர்.
மணவெளி
கிராமத்திற்கு அருகிலுள்ள
தண்டுகரை
மேடு என்ற பகுதியில் சிறு குடிசை
அமைத்து
வசித்து வந்துள்ளார்.
அங்கு
தீவிரமான ஆத்ம சாதனையில்
ஈடுபட்டிருந்தார்.
பிரச்சனைகளால்
பாதிக்கபட்ட மக்களுக்கு
குறைகளை
தீர்த்து வைத்துள்ளார்.
பக்தர்களை
தேங்காயை கொண்டு வரச்செய்து அதை
உடைத்து
பார்ப்பாராம். தேங்காயினுள் நீல நிறத்தில்
எழுத்துக்கள்
தெரியுமாம். அதைப்படித்து பக்தர்களின்
பிரச்சனைகளுக்கு
தீர்வு சொல்வாராம்.
அதனாலேயே
”தேங்காய் சித்தர்” என்ற பெயர்
வந்ததாம்.
பில்லி சூன்யம் –ஏவல் முதலியவற்றை
விரட்டி
அடிப்பாராம். பச்சிலை மூலிகைகளைக்
கொண்டு
கை தேர்ந்த வைத்தியம் செய்வாராம்.
அவர்
கை பட்டாலே நோய் பறந்து விடுமாம்.
சில
ஆண்டுகளுக்கு பிறகு வில்லியனூரில்
மரத்தடியில்
அமர்ந்து முக்தி அடைந்து விட்டார்.
அவருக்கு
அங்கேயே சமாதி எழுப்பி வழிபாடு
செய்து
வருகின்றனர்.
சுவாமிகளுக்கு
தேங்காயை வைத்து வழிபட்டால்
பிரச்சினைகள்
தீரும் என்ற நம்பிக்கை.
இன்றளவும்
உள்ளது. .