Showing posts with label பெண் சித்தர் சடையத்தம்மாள்-பகுதி 1. Show all posts
Showing posts with label பெண் சித்தர் சடையத்தம்மாள்-பகுதி 1. Show all posts

Thursday, May 30, 2013

ஸ்ரீ குருசாமி அம்மையார்

ஸ்ரீ குருசாமி அம்மையார்



ஞானபூமியாம்-புதுவையை நாடி வந்த எண்ணற்ற
யோகிகளுல் பெண்சித்தராம் ஸ்ரீ குருசாமி அம்மையாரும்
ஒருவர். இவர் வடமாநிலத்தில் இருந்து புதுவைக்கு
ஆன்ம விடுதலைக்காக வந்திருக்கலாம் என்று
நம்பப்படுகிறது. இறைவனின் அருள் நாடி,
தவத்தில் ஈடுபட பல ஸ்தலங்களுக்கும் சென்று
கடைசியில் புதுவையை வந்தடைந்து-இச்சித்த பூமியே
தான் தேடிய தவச்சாலை என உணர்ந்து இப்புதுவையில்
தங்கி விட்டார். இவருடைய காலம் 1890-களாக
இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

புதுவையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில்
அரியூர் என்னும் சிற்றூரில் சர்க்கரை ஆலைக்கு
மேற்கில் இவருடைய ஜீவசமாதி அமைந்துள்ளது.


.புதுவையின் சூழலும், அமைதியும் அம்மையாருக்குப்
பிடித்துப் போக.. அரியூரிலுள்ள ஒரு தோட்டத்து
மரத்தடியில் தங்கி விட்டார். பசியைப்
பற்றிக் கவலை கொள்ளாமல், சதாகாலமும்
தியானத்திலேயே இருப்பார். இதை கவனித்த
அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து
கொடுத்து அவரை அன்போடு கவனித்துக் கொண்டனர்.
நாளடைவில் அம்மையாரிடம் அருட் சக்தி இருப்பதை
உணர்ந்து அவரை தஞ்சம் அடைந்தனர்..
தங்களுக்குள்ள மனக் குறைகளை அம்மையாரிடம் 
கொட்டுவார்களாம். அவர்களின் குறைகளை எல்லாம் 
புன்னகையுடன் கேட்டுக் கொண்டு, ஆசி புரிந்து 
அனுப்பி வைப்பாராம். அவர்களும் நிம்மதியுடன் வீடு
திரும்புவார்கள் பக்தர்கள்  தங்கள் வியாதிகளை

தெரிவிக்க அதையும் அவர் தீர்த்து வைப்பாராம்.
அம்மையாரின் உண்மைப் பெயர் யாரும்

அறிந்ததில்லை. அவருடைய நீளமான கூந்தலின்
வளர்ச்சி கண்டு அவரை “சடையம்மாள்” என்றும்
”சடையத்தாயாரம்மாள்” என்றும் அன்போடு
கூறுவார்கள்.

குருசாமி அம்மையார் சாதாரணமானவரா..
இறையருள் பெற்றவர் ஆயிற்றே! இவரிடம்
வந்து ஆசி பெற்றுச் சென்றவர்கள் அடுத்து வந்த
சில நாட்களிலேயே தங்களது குறைகள் அகலப்
பெற்றனர். அதன்பின் அம்மையாருக்கு நன்றி
தெரிவிக்கும் பொருட்டு, இவரது இருப்பிடம் தேடி
வணங்கிச் செல்வார்கள். அப்படி வருபவர்களில்
பொருள் வசதி படைத்த சிலர் அம்மையாரின்
தியானமும் அருட்பணியும் தடைபடாமல்
இருப்பதற்காக, போதிய இட வசதியை அவருக்கு
ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்னும் சிலர்
நிலபுலன்களையும், சில சொத்துக்களையும் அம்மையார் 
பெயருக்கு எழுதிக் கொடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.




அடுத்த  பதிவில் தொடரும்.........