Showing posts with label மகாகவி பாரதி பாடல். Show all posts
Showing posts with label மகாகவி பாரதி பாடல். Show all posts

Saturday, May 18, 2013

ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளைப் பற்றி மகாகவி பாரதி

ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளைப் பற்றி

மகாகவி பாரதி எழுதிய பாடல்



மகாகவி பாரதியார் புதுவையில்-குயில் தோப்பில் பாடல்
இயற்றிய பொழுது-அங்குள்ள சித்தர் மகான் ஸ்ரீ சித்தானந்த சுவாமி மேல்
ஒரு பாடல் இயற்றியுள்ளார்;-

மகாகவி பாரதியார், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பற்றி சிறப்பாக
பாடியுள்ள பாடல் இதோ ;

சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளியுண்டாம்; பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே

உள்ளத்தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்டவருஞ் சுடராம்; பெண்ணே
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்டவருஞ் சுடராம் ; பெண்ணே

தோன்று முயிர்கள் அனைத்தும் நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்; பெண்ணே

பட்டினந்தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிசுடராம்; பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காணவொளிர் சுடராம்; பெண்ணே  .