Friday, May 31, 2013

ஸ்ரீ லட்சுமண சுவாமிகள் பகுதி-2


ஸ்ரீ லட்சுமண சித்தர் சுவாமிகள்



சுவாமிகளின் பெருமையை அப்பகுதி மக்கள்
முழுவதும் அறிந்திருந்தனர்.

தான் அம்பாளின் பாதத்தை அடையும் தருணம்
நெருங்கி விட்டதை உணர்ந்த சுவாமிகள்
புத்துப்பட்டு ஐய்யனார் கோவிலின் பின்புறம்
இருந்த பத்மாசூரன் குளக்கரையின் அருகில் 
தியானத்தில் அமர்ந்து விட்டார்.
நாளடைவில் புற்று மண் வளர்ந்து –சுவாமிகள்
புற்றாகவே மாறி விட்டார்.
சுவாமிகள், 1947-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந்
தேதி சமாதியானார்.

(ராணுவ லாரியில் அடிபட்டு-மறு நாள் காலையில்
ஐய்யானார் கோவிலில் இறந்து கிடந்தவரை
கோவில் பின்புறம் சமாதி வைத்ததாகவும்-
ஒரு செய்தி உண்டு)

இன்றளவும் அவருடைய பக்தர்கள், அவருடைய
சமாதி பீடத்திற்கு வந்து சுவாமிகளுக்கு மலர்
அலங்காரம் செய்து அவருக்கு பிடித்த பால் பாயாசத்தை 
படைத்து அமைதியாக அமர்ந்து
தியானம் செய்து வழிபட்டுச் செகின்றனர்.

சுவாமிகளின் புற்றின் அருகில் ஒரு பெரிய
வேப்ப மரம் வளர்ந்து நிழல் தந்து வருகிறது.
அதை, திருடன் ஒருவன்  வெட்ட முயன்ற
போது- ”வெட்டாதே” என்று அசரீரி எழுந்தது.
அதை பொருட்படுத்தாத அக்கயவன் அம்மரத்தை
வெட்டியதால்-அங்கேயே விழுந்து விட்டான்.
இரவு முழுதும் அவனால் எழுந்திருக்க முடியாமல்
படுத்துக் கிடந்தான். மறு நாள் அவ்வழியே சென்ற
வழிப்போக்கர்கள் அவன் நிலையைக் கண்டு-அவனை
தூக்கிக் கொண்டு போய் அவன் வீட்டில் சேர்த்தனர்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் அவனுடைய
உயிர் பிரிந்தது.
வெட்டிய மரத்தின் துண்டுகள்
ஐய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தின் போது
பயன்படுத்தப்பட்டது.

ஸ்ரீ லஷ்மண சுவாமிகளின் அருட்சக்தியை கண்ணால்
கண்டவர்கள் இன்றும் சிலபேர் உள்ளனர்.
அவரால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நல்ல நிலையில்
வசதியாக உள்ளனர்.
சுவாமிகளின் சமாதி பீடத்தினருகில் அமர்ந்து
மனமுருகி, உண்மையாய் வேண்டுபவர்களுக்கு
சுவாமிகளின் திருவருள் கிடைப்பது முற்றிலும்
உண்மை.



No comments:

Post a Comment